செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

சிறுப்பிட்டி ‌மனோன்மணி அம்மன் ஆலையத்தின் இளையதம்பி குடும்பத்தினரால் நடைபெற்ற சப்பறத்த்திருவிழாவில் அவர்கள் ஒத்துழைப்புடன் எமது ஊரின் ஒன்றுபட்ட முன்நேற்றதை கருத்தில் கொண்டு மூன்று வாசிகசாலைக்கு தலா ஒவ்வொரு கணனிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது. இதை நீகள்கள் இந்த இணையப்பதிவில் பார்க்கலாம். இந்தச்செயல் பாட்டுடன்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் செயல்பாட்டுக்கு வருகின்றது என்பதனை எமது உறவுகளுக்குத்தெரிவித்துக்கொள்கிறோம்.அத்தோடு சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அன்பான வேண்டுதலை நிறைவேற்றிய அம்மன் ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் திருவிழா உபயகாறர்களான இளையதம்பி குடும்பத்தினருக்கும் இங்கிருந்து சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தால் பெருள்கள் வழங்க நிதியுதவி வழங்கிய உறவுகளுக்கும் அதை ஆலயவிழாவில் செயல் வடிவாக்கிய பொதுத்தொண்டர்கள் ஸ்ரீஅண்ணருக்கும் அவர்மகன் சுரேனுக்கும் திரு கோடிஸ் வரன் அவர்தம் துணைவியார் அருந்தவதேவிக்கும்
எமத உளமார்ந்த நன்றிகள்.
இந்த சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் எமது ஊர்சார் நலன் கருதி என்றும் ஊர் ஒற்றுமையை முன்னிறுத்தி செயலாற்றும் என்பதை இங்கே உறுதிப்படுத்திக்கொள்கிறோம்
ஊர்வளம் காப்பது எம் கடமை வீண் வார்தைகள் பேச்சோடு போக
செயலாற்ற வாருங்கள் இணைந்தால் ஊர்வளம் நன்று ஆகும் வாருங்கள் இணைவோம் செயலாற்றுவோம் இது உங்களது.உலகத்தமிழர் ஒன்றியம்
ஒன்றிய விரிவாக்கம் ,தொடர்பாடல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்.அங்கு வாசிக்கப்பட்ட தகவலின் எழுத்து வடிவம்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் ஆனது எமது ஊரின் திசைகளைவைத்து பிரிவினை பார்காது தனித்துவமாக எமது ஊரின் நலனுக்காகவே செயல் ஆற்ற உள்ளது.
இதில் எமது ஊர்களை இணைக்கும் வண்ணம் இருக்க வேண்டியது முக்கியமானது மட்டுமல்ல இணைந்த செயல்பாடு நம் ஊர் வளர்ச்சிக்கும் சிறப்பைத்தரும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம் பழமை வாதிகளின் செயகளை மறந்து ஊரின் நல் நோக்குக்காய் இணைந்து பயணிப்போம்!
இக் கணனித்திட்டமானது எமது ஊர் சிறார்களின் படிப்பை முன்னோக்காகக் கொண்டு முன்வைத்த திட்டமாகும்.

முக்கிய குறிப்பாக இங்கே நாங்கள் எமது முன்னோர்கள் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டவில்லை ஆனால் உதாரணப் படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம் பல கல்விமான்கள் வாழ்ந்த எமது ஊர் ஆனால் அவர்களால் எமது ஊருக்கு என்ன நன்மை கிட்டியது? யாருக்காவது இலவசமாக பாடம் கற்பித்து எங்கள் ஊரவரை முன்னேற்றினார்களா?
இல்லை! அதனால் நாம் வாழும் போது எது ஊருக்காய் ஏதாவது செய்வோம் அதுவும் இணைந்து செய்வோம என்ற
நோக்கில் உருவாக்கப் பட்ட திட்டமே இந்தக் கணனிகள் வழங்கும் திட்டம்
இதற்கு நிதி வளங்கியவர்கள் ஏதோ பணத்துக்கு மேல் படுத்திருந்து தான் இதைச் செய்ய முன் வந்ததாயும் நினைக்காதீர்கள் இங்கும் கஸ்ரங்கள் உள்ளது அதர்கு மேல் எமது ஊரை வளப்படுத்தும் பணியும் எம்மிடம் உள்ளதால் தான் இந்தத்திட்டம்!
இந்தக் கணனிகளானது எமது ஊர் சிறார்கள் கற்பித்தல் விரிவடையும் நோக்கில் முன் எழுத்த நோக்காகும். இது ஆரம்பமே இன்று எங்கு பார்த்தாலும்
கணனிமயம் இதற்கு எது ஊர் பிள்ளைகள் ஈடு கொடுப்பதானால்
அவர்களுக்கு கிழமையில் ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ அது பற்றி ஆளுமை உள்ள இளைஞர்கள் முன் வந்து கற்பித்தல் வேண்டும் என்பது எமது நோக்கமாகும் அத்தோடு உங்களால் முடிந்தால் முதியவர்களுக்கும் கணனி ஆழுமையை கற்றுக்கொடுக்கலாம!
அத்தோடு இவற்றின் பணிகளில் ஒன்றாக எமது ஊர்களின் அதிகார பூர்வமான இணையமான சிறுப்பிட்டி நெற்றுக்கு ஊரில் உள்ள அனைத்துக் கோவில்விழாக்காள் பொது நிகழ்வுகள் நன்மைகள் தீமைள் எவையாக இருந்தாலும் தகவல் பரிமாற்றாம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

எமது ஊருக்கு இருக்கும் இணைய பலத்தால் எமது ஊரின் புகழ் பரப்பி இணைந்து வாழ்வோம்
முக்கிய குறிப்பு இந்தக் கணனிகள் ஆனது தனிப்பட்ட பாவனைக்கு அனுமதிக்கப் படமாட்டாது. இவற்றைக் கவனிக்கும் பொறுப்பு அண்ணர் ஸ்ரீகந்தராஜாடமும் கோடீஸ்வரன் அவர்களிடமும் உள்ளது.

ஒன்றிய மேலதிக தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்

இப்படிக்கு சிறுப்பிட்டி உலகத் தமிழர் நிர்வாகம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert