ஊடக மாணவனிற்கு விசாரணைக்கு அழைப்பு

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவனும், சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 

பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முகநூலூடாக முனைகிறார் என ஒரு தேரர் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியதனை தொடர்ந்தே  பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்ககாக அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தென்னிந்தியாவில் வெளியாகிய மேதகு திரைப்பட முன்னோட்ட காணொளியை தனது முகநூலில் பதிவிட்டதையடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert