மேலும் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்

எழுவைதீவு கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, இவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகாக, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert