மீனவர்கள் விவகாரம் :வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

latest tamil news

இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடித்ததில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: இலங்கை சிறையில் தமிழகத்தை சேர்ந்த 56 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களது 75 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொங்கலை முன்னிட்டு மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் . இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert