தங்கசுரங்கத்திற்கு வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி வெடித்து சிதறியது…. 17 பேர் பலி!

கானா நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்திற்கு சுரங்க வேலைகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற பாரவூர்தி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பாரவூர்தியில் தீப்பற்றியது. இதனால், வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இந்த கோர வெடி விபத்தில் பாரவூர்தி சென்றுகொண்டிருந்த சந்தைப்பகுதி முழுவதும் நாசமானது.

சக்திவாய்ந்த வெடிமருந்துகள் வெடித்ததில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert