siuppiddy muthumarai

நிலத்தில்வாழும் வைத்தியநாதன் குடும்பத்தினர் ஶ்ரீஸ்கந்தராஐ◌ா குடும்பத்தினர் புலத்தில்வாழும் கிருஷ்ணா குடும்பத்தினர் (மோகன்) சுவிஸ் இணைந்து இன்றைய பன்னி ரண்டாம்நாள் தீர்த்தத்திருவிழா இவர்கள் உபயத்தில் ஊர் கூடி மிகச்சிறப்பாக சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்தீர்த்தத்திருவிழா (02.04.2014) , இன்று பன்னிரண்டாம்நாள் திருவிழாவாக முத்துமாரி அம்மன் தீர்த்தம் ஆடியுள்ளார் .ஆனாலும் இன்றைய நிழல் படங்கள்  இதுவரை எமக்கு கிடைக்கவில்லை கிடைத்ததும் பதிவில் கீழ்பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.

திசைகள் எட்டும் பார்த்து -அம்மன்

தீர்த்தம் ஆடும் காட்சி

தீராத வினையாவும் -அவர்

தீர்த்தம் தீர்க்கும் பாரீர்

 

ஊர் பார்க்க உலா வந்து தீர்த்தமாடினாள்

உல்லாசப் பவனியோடு தீர்தம் ஆடிநாள்

ஊர் கூடி அவளை இன்று தோளில் ஏற்றினார்

ஒளி தீபம் தனைக்காட்டி அவர்போற்றினார்

 

ஓங்கார நாயகியே நீயும்வாடி

ஒளியோடு முகம்காட்டி அருள்தாடி

தீண்டாமல் பிணிதீர்க்கும் வரம் தாடி

திக்கெட்டும் ஒளிவீசிஅருள்தாடி

 

. அருள்தாடி அம்மா அருள்தாடி

ஒளியாகி அம்மா அருள்வாய்-நீ

ஆதியின் தேவியே முத்துமாரி

அன்னையின் ரூபமே முத்துமாரி