வடக்கில் 31 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 32 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் அடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 04 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert