கட்டுப்பாட்டை விதித்த நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் வரும் 2027-ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில், சிறுவர்கள் அதிகளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனடிப்படையிலே அந்நாட்டு சுகாதாரத்துறை இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2027-ல் 14 வயதை எட்டும் அனைவருக்கும், நிரந்தரமாக சிகரெட் விற்க தடை விதிக்கப்பட உள்ளது.

இதன், மூலம் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும், என அந்நாட்டு சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆயிஷா வெரால் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert