என் கவிதைகள்

மனிதன் வாழ்க்கை பொய்யடா

மனிதன் வாழ்க்கை
பொய்யடா வாழ்ந்து
பார்த்தால் தெரியுதடா
இரவும் தோன்றி பகலும் வந்தால்
இவனின் கதையும் விளங்கும்

தூங்கும்போது தெரியவில்லை
மனதிலுள்ள நினைவுகளும்
எழுந்தபின்னே புரிந்த தடா-அவன்
இதயத்துடிப்பும் இருந்தது
மண்ணை ஏதும் சொந்தமில்லை
மாடி மனை சொந்தமில்லை
உன் செந்தம் என்றும் ஏதுமில்லை
உயிர் போனால் போனபின்னே உடலும் இல்லை

மார்பில் வளர்த்த அன்னை கூட- நீ
மறையும்போது வரமாட்டாள்
மாலை அணிந்த மனையாளும்
மண்ணில் புரண்டு கதறினார்
மண்ணை ஏதும் சொந்தமில்லை
மாடி மனை சொந்தமில்லை
உன் செந்தம் என்றும் ஏதுமில்லை
உயிர் போனால் போனபின்னே உடலும் இல்லை

 இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா

உருவானகாலம் 1982