கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட பெண்!- வேலைக்காரி வெறித்தனம்

மட்டக்களப்பு பார் வீதியில் வீட்டிலிருந்த பெண் ஒருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்திலிருந்த தங்க ஆபரணங்கள், தோடுடன் காதை வெட்டியெடுத்து, அதனை சொப்பின் பையொன்றில் எடுத்துச் செல்ல முற்பட்ட வேலைக்காரி மற்றும் அவருடைய தந்தை ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவ்விருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

இந்த சம்பவம் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட ​பெண், அவருடைய கணவன், மகள் ஆகிய மூவர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பகல் கடந்த காலத்தில் அங்கு வீட்டுவேலை பார்த்து வந்த பெண், தந்தையாருடன் சென்று தனது கஸ்டத்தை தெரிவித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் மதியபோசன உணவை முடித்து விட்டு நித்திரை கொள்வதற்கு மேல் மாடிக்கு சென்றுள்ளார். அதேவேளை, மகளும் உணவை உண்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.

அதேநேரம் உயிரிழந்த அப்பெண், குறித்த வேலைக்காரி மற்றும் அவரின் தந்தையாரை உணவு உண்டுவிட்டு போகுமாறு அமர்த்தியுள்ளார்.

எனினும், வீட்டு எஜமானியை கத்தியால், கழுத்து மற்றும் கைகளை துண்டாகவெட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண் உயிரிழந்துவிட்டார். அவரிடமிருந்த நகைகள் அபகரித்துக்கொண்டு, ஓட்டோவொன்றில் தப்பியோட முயற்சித்த போதே, பொதுமக்களால் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட பெண் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert