தவமணி இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு ஆனதுவோ அன்னையவள்

பிரிந்து?

கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள் விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில் புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!

பொழிந்த உங்கள் பாசத்தினை எண்ணி விழியிலே வழிந்தோடும் நீரதைத் துடைக்க வழிபார்த்து வாசலில் காத்துள்ளோம் – மீதிக்காலமதைக்

கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!

அன்னமது அளித்து ஆறுதலாய்ப் பேசிய உன்னத அன்பின் ஊற்றினைப் பிரிந்து கன்னத்தில் வடியுது கண்ணீர் வெள்ளமாய்! தன்னந்தனியே எமைத் தவிக்கவிட்டு சென்றீர்களேயம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert