முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1696 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://www.seithy.com/siteadmin/upload/mullai-demo-281021-seithy%20(3).jpg)
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே; குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து ; வேண்டும் நீதி வேண்டும்; சர்வதேசமே பதில் சொல்; என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://www.seithy.com/siteadmin/upload/mullai-demo-281021-seithy%20(6).jpg)
போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அண்மையாக 15 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர்.
![](https://www.seithy.com/siteadmin/upload/mullai-demo-281021-seithy%20(5).jpg)